உடப்பு தமிழ் கலாச்சரத்தின் ஊற்று by கலாநிதி வஸ்தியாம்பிள்ளை சிவலோகதாசன் Published by Kumaran Book House , 1st Edition
உடப்பூரின் வரலாறு கலை கலாச்சாரம்; பண்பாடுகள் மரபுகள் போன்றவைகளை ஆராய்வதுடன் அவற்றின் பரிணாம வளர்ச்சி அதில் உடப்பு ஊhவரின் பங்களிப்பு என்பவற்றையும் விபரிக்கின்றது. இவ்வம்சங்களை பிரதிபளிக்கும் புகைப்படங்கள் மற்றும் மக்களின் வாழ்வியல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
சமகாலத்தில் நவீனத்துவம் என்ற போர்வையில் தமது பாரம்பரியங்கள்இ கலாசார பண்பாடுகள்இ விழுமியக் கூறுகள்இ தமது முன்னோர்கள் கட்டிக்காத்த சமய நெறி முறைகள்இ சடங்குகள்இ சம்பிரதாயங்கள்இ வாழ்வியல் எச்சங்கள் அதனையொட்டிய நெறிமுறைகள் இன்னோரன்ன செந்நெறிகளைஇ பாரம்பரிய நெருடல்களை தற்கால இளம் சமூகம் அறிந்து கொள்ளுவது அவசியம் என்பதை நூலாசிரியர் சிவலோகதாசன் தனக்கே உரிய முறைமைகளில் பிரகடனப்படுத்தியுள்ளார். தமிழர்கள் வடஇ கிழக்கில்இ மலையகத்தில் மட்டுமில்லாமல் வடமேல் கரைகளிலும் சிறப்புடனும் பெருமையுடன் அரசாட்சி புரிந்துள்ளார்கள் என்பதை எடுத்தியம்பியுள்ளார். பன்னிரண்டு அத்தியாயங்களில் இந்நூல் மணம் விரித்துள்ளது. வடமேல் கரைத் தமிழர் வரலாறுஇ ஆடுவரலாறு உடப்பூரும்இ குல தெய்வங்கள் சமூக அமைப்புஇ அரங்க கலைகள்இ வாழ்வியல் சடங்குஇ நாட்டாரிலக்கிய பண்புகள்இ வாய் மொழி இலக்கியம்இ கிராமிய வழிபாடுஇ கற்று வந்த பாடல்கள்இ கிராமிய பண்புரைக்கும் விளையாட்டு முறைமைகள்இ நீங்கா நினைவுரைக்கும் பழமொழிகள் என்ற செந்நெறிகளில் எடுத்துரைக்கும் கலாசார ஊற்றான பனுவலாக இந்நூல் திகழ்கின்றது. உடப்பு கலாசாரத்தின் ஊற்று நூலைத் தந்த சிவலோகதாசன் அன்றைய உடப்பின் பண்பாட்டையும் அதன் தாற்பரிய ஊடாட்டாங்களை பாரம்பரியத்தையும் இன்றைய நவீனத்துவ செழுமைகளையும் புடம் போட்டு தருகின்றார்.