எல்லோரும் எல்லாமும் பெற படிக்க வேண்டிய புத்தகம் : இக்கரையா ? அக்கரையா ? உங்கள் வாழ்நாள் முழுவதும் by E.P. Thirumalai – ஈ.பி. திருமலை Published by Jaico Publishing House , 2nd Edition
வெற்றிக்கு வழிக்காட்ட அறிவுப்பூர்வமான புத்தகங்கள் பல உண்டு. ஆனால் உணர்வுபூர்வமாக மயிலிறகு கொண்டு இதயத்தை வருடுவதுபோல் இதமாக சற்றே உறுதியாக எடுத்துரைக்கின்ற புத்தகங்கள் மிகக்குறைவு. அவ்வகையில் இப்புத்தகம் இன்று யார் எந்த நிலையில் இருந்தாலும் இக்கரையில் இருக்கும் இன்றைய வாழ்க்கையிலிருந்து பிடித்தமான அக்கரை நோக்கிய சிறந்த வாழ்க்கைக்கு பயணிக்க வழிக்காட்டும் கலங்கரை விளக்கம்! இது ஒரு சுயமுன்னேற்ற வகை புத்தகம். ஆசிரியர் ஆழமாகவும் சற்றே அழுத்தமாகவும் எடுத்துரைக்கின்ற ஒரு முக்கியமான கருத்து:
‘நீ உருவாக்கும் முடிவுகளே உன்னை உருவாக்கும்!’
புத்தகம் படிப்பதின் பயன்கள்…
அளப்பறிய சிந்தனைகளை சாதனைகளாக்குவது எப்படி?
ஊக்கத்தினால் ஆக்கத்தை தேடுவது எப்படி?
எண்ணத்தை மாற்றுவதன் மூலம் வாழ்க்கையை மாற்றுவது எப்படி?
தடைக்கற்களை படிக்கற்களாக்குவது எப்படி?
மக்கட்பண்பை வளர்த்துக்கொள்வது எப்படி?
சிறந்த வாழ்க்கைக்காக நேரத்தை முதலீடு செய்வது எப்படி?
உண்மையான வழிக்காட்டுதலை உணர்வது எப்படி?
அபரிமிதமான வாழ்க்கையை அனுபவிப்பது எப்படி?
மனதிற்கு பிடித்தவற்றை கண்டுப்பிடிப்பது எப்படி?
வாழ்க்கையின் இறுதி லட்சியத்தை அடைவது எப்படி?