மயில் புராணம் : பிரிவினைக் கதைகள் ,பாகிஸ்தானிய சிறுகதைகள் by இந்த்ஜார் ஹுசைன்
தமிழில்: கே. நல்லதம்பி Published by எதிர் வெளியீடு,FirstEdition-2021
இந்த்ஜார் ஹுசைன் பாகிஸ்தான் எழுத்தாளர். இவர் தன்னை ‘கனவுகளின் வியாபாரி’ என்று கூறிக்கொள்கிறார். இவருடைய சிறுகதைகளைப் படித்தவுடன் இவர் ‘கனவுகளின் வியாபாரி’ அல்ல, சமுதாயத்திற்கு தேவையான ‘தன்வந்தரி’ என்ற எண்ணம் நமக்குள் தோன்றுகிறது.
தீவிரமான விஷயங்களை நுணுக்கமாகச் சொல்கிறார். குரான், பைபிள், இராமாயணம் மகாபாரதம், புத்த, சமண நூல்களை நன்கு கற்றரிந்தவர். அவர் கதைகளில் அதைக் காணலாம். இதுபோன்ற படைப்புகளே உலகத்தைச் சுருக்கி நம் கனவுகளையும் அனுபவங்களையும் விரிவடையச் செய்பவை