பொருளாதார அபிவிருத்தி : சிங்கப்பூர் இலங்கை by செல்வரத்தினம் சந்திரசேகரம் published byசேமமடு பதிப்பகம்
இந்த நூல் சிங்கபூரையும் இலங்கையையும் மையப்படுத்தி பொருளாதார அபிவிருத்திஇ அரசியல் அபிவிருத்தி தொடர்பாக புலமைத்துவ அடிப்படையிலான ஒப்பியல் ஆய்வாக வெளிவந்துள்ளது. ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் கொள்கை வகுப்பாளர்களுக்கு பல பிரதான விடயங்களைத் துணிவுடன் எடுத்துக் கூறுகின்றது. 1962 இல் இலங்கையின் தலாவருமானத்தில் ருளுகூ 300 ஐ அதிகமாக கொண்டிருத்த சிங்கபூர் 2012 இல் ருளுகூ 40350 ஐ அதிகமாக 134 மடங்கு அதிகமாகப் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது. இவற்றுக்கான காரணங்கள் யாவை என்று புலமைசார் அடிப்படையில் ஆய்வு செய்கின்றது. ஒரு மென்மையான எதேச்சதிகார ஆட்சி ஊடாக சிங்கப்பூர் எழுச்சி கண்டமை பற்றியும்இ பெயரளவில் ஜனநாயகத்தைக் கொண்டிருந்த இலங்கை சமூக நலன் பேணுதல் நடவடிக்கை மூலம் பிரித்தானிய ஆட்சியில் திரட்டப்பட்டிருந்த மூலதன திரட்சியை எவ்வாறு வீணாக்கியது என்றும் எடுத்துக்காட்டுகிறது. குதிரை (வளர்ச்சி) வண்டியை (சமூக செலவீடு) இழுக்க வேண்டுமே ஒழிய வண்டி குதிரையை இழுக்க முடியாது என்ற உதாரணங்களோடு இவற்றை ஆசிரியர் விளக்குகின்றார்.
இலங்கையும் சிங்கபூரும் பன்மைச் சமூகத்தைக் கொண்டிருந்த போதும் சிங்கபூர் லீ-குவான் – யூவின் அரசியல் பொருளதார தலைமைத்துவத்தின் மூலம் எவ்வாறு ஒரு வகைச் சர்வதிகார ஆட்சியை மேற்கொண்டு பொருளதார அரசியல் வளர்ச்சியை அடைந்தது பற்றி ஆசிரியர் சிலாகித்துப் பேசுகின்றார்.
சிங்கபூரில் லீ-குவான் யூவின் தலைமைத்துவம் எவ்வாறு அந்நாட்டைப் பொருளாதார அரசியல் அபிவிருத்தி செய்ததோ அதை ஒத்த தலைமைத்துவம் ஒன்று இலங்கைக்குத் தேவை என்றும் அத்தகைய தலைமைத்துவத்தினால் இலங்கை பொருளாதார அரசியல் உறுதிப்பாட்டை அடையும் என்பது ஆசிரியரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கின்றது. முதலில் பொருளாதார அபிவிருத்தி அதன் பின்னரே சமூகநல அபிவிருத்தி என்பது ஆசிரியரால் வற்புறுத்தப்படுகின்றது. லீ-குவான்-யூவின் தலைமைத்துவத்தின் கீழ் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் இங்கு ஒப்பிட்டுக் காட்டப்படுகின்றன.