தண்ணீர் தேசம் by கவிப்பேரரசு வைரமுத்து Published by Soorya Literature ,27th Edition 2020
கலைவண்ணன் பத்திரிகையாளன்இ அவனது காதலி தமிழ் ரோஜா. தண்ணீர் என்றால் கலைவண்ணனுக்கு விருப்பம். தமிழ் ரோஜா பள்ளியில் படிக்கும் போது படகில் இருந்து தண்ணீரில் விழுந்து உயிர் பிழைத்ததால்இ தண்ணீர் என்றாலே பயம்.
தண்ணீர் பயத்தைப் போக்க திட்டமிடாமல் தனது மீனவ நண்பர்களுடன் தமிழ் ரோஜாவைப் படகில் கடலுக்கு அழைத்துச் செல்கிறான் கலைவண்ணன்.
நடுக்கடலில் படகு பழுதாகி விடஇ சுற்றிலும் தண்ணீர்இ பிடிக்காத சூழல் என்று தமிழ் ரோஜாவுக்குச் சூழ்நிலை மோசமாக அமைந்து விட என்ன ஆகிறது என்பதே கதை.
கவிதையைப் பற்றிக் கிண்டலாகக் கூறும் போதுஇ நீளமாக எழுதினால்இ கதை. மடக்கி மடக்கி எழுதினால் கவிதை என்பார்கள் . இந்நாவல் கிட்டத்தட்ட அப்படித்தான் உள்ளது. 80% வழக்கமான எழுத்து, 20% கவிதை போல எழுத்து.
இந்நாவலில் பல அறிவியல் செய்திகளும்இ நம்பிக்கை தரும் வார்த்தைகளும் ஏராளமாக உள்ளது. போகிற போக்கில் பெர்முடாஸ் முக்கோண திகில் காரணங்களையும் விளக்கிச் செல்கிறார்.
கடலில் ‘நெருப்பு பேய்’ என்று மீனவர்கள் அலற அதற்குக் கலைவண்ணன் அறிவியல் விளக்கம் கூறுவது போல வருகிறதுஇ கடலிலேயே இருக்கும் இவர்களுக்கு இதன் காரணம் தெரியாமல் இருக்குமா?!