தீப் திரிவேதி ஒரு பிரபலமான நூலாசிரியர் மற்றும் பேச்சாளர். தனிநபர்கள் தங்களுடைய முழு ஆற்றலையும் உணர்ந்து கொள்ள அவர்களை வழிநடத்துகின்ற வகையான நூல்களை எழுதுவதிலும் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் தன்னுடைய எழுத்துக்களிலும் சொற்பொழிவுகளிலும் பயன்படுத்துகின்ற ஆன்மிக-உளவியல் மொழியும் விளக்கங்களும் அவருடைய வாசகர்களின் மனங்களிலும் பார்வையாளர்களின் மனங்களிலும் ஓர் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது அவரை இத்துறையில் ஒரு முன்னோடியாகத் திகழச் செய்கிறது.