முனைவர் தொல். திருமாவளவன் தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அரசியல்வாதியும் ஆவார். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார்.
சாதீய அடக்குமுறையினை எதிர்த்தல், ஈழ விடுதலை ஆதரவு, இந்துத்துவ கருத்துகளை எதிர்த்தல் போன்ற கொள்கையினை வலியுறுத்தும் விதமாக முனைவர் திருமாவளவன் பல கட்டுரைகள் மற்றும் நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:

அத்துமீறு
தமிழர்கள் இந்துக்களா?
ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்
இந்துத்துவத்தினை வேரறுப்போம்
அமைப்பாய் திரள்வோம்.