சூழலியல் உளவியல் கலைவடிவங்கள் by சபா.ஜெயராசா Published by சேமமடு பதிப்பகம் 2nd edition , Reprint
சூழலியல் என்பது வளர்ந்து வரும் அறிவுத் துறையாகி மேலெழுகின்றது. பல்கலைக்கழகங்களில் அதன் பன்முகத் தன்மைகள் நோக்கிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உலகளாவிய முறையிலே ஆய்வு மாநாடுகளும், கருத்தரங்குகளும், அறிவுப் பரிமாற்றங்களும் இத்துறையில் நிகழ்த்தப்படுகின்றன. சூழற் பாதுகாப்புத் தொடர்பான அரச நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் உருவாக்கம் பெற்று வருதல் பிறிதொரு தோற்றப்பாடு. சூழலியற் பாதுகாப்புத் தொடர்பான சட்டவாக்கங்களும் இடம் பெறுகின்றன. சூழலியலின் பன்முகப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய நூல் ஒன்றின் தேவை உணரப்பட்டு இந்த ஆக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூழலுடன் தொடர்புடைய உளவியல், சமூகவியல், பண்பாட்டியல், கல்வியியல், இலக்கியங்கள், திறனாய்வு முதலாம் துறைகளை உள்ளடக்கிய அகல் அடக்கல் நூலாக இது இடம்பெற்றுள்ளது.
உள்ளடக்கம் :சூழலியல் உளவியல் , நிலத்தோற்றம் சார்ந்த உளவியற் பதிவுகள், கட்டட அமைப்பு உளவியல் , வளர்முக நாடுகளின் சூழலியற் பிரச்சினைகள் , போரும் சூழலியல் உளவியலும், இருத்தலியமும் உளவியலும் சூழலும்,சூழலியல் வாதம், சூழல் இறையியல்,இனக்குழுமச் சூழலியல், மருத்துவச் சூழலியல், சூழல் அழகியல் , சூழலியற் கலை, இசையிற் சூழலியல், உடல் மொழி ,சூழலியல் திறனாய்வு,குழந்தை வளர்ச்சியும் சூழலியலும்,சூழலியற் கல்வி, பசுமைச் சமாதானம், பண்பாட்டின் முனைப்பு உளவியல் , பிரதேச இலக்கியம்,தேசிய இலக்கியம்